Podcast thumbnail for ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

Claim This Podcast

by ஞானத்தேடல் - Quest for Knowledge

5.0(3 reviews)
140 episodes
Updated Weekly
Accepts GuestsHas SponsorsLocation 🇮🇳

Podcast Overview

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.

Language

🇹🇦

Publishing Since

7/12/2021

1 verified contact email on file for ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

Pitch yourself as a guest, propose sponsorships, or reach out directly to the host.

Recent Episodes

Episode thumbnail for ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal)

May 26, 2024

ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal)

<p>குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல்</p> <p><br></p> <p>தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான &quot;குறிஞ்சிப்பாட்டு&quot; குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். </p> <p><br></p> <p>Flowers in Kurinji Paatu</p> <p><br></p> <p>Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers</p> <p><br></p> <p>References</p> <p>குறிஞ்சிப் பாட்டு</p> <p><br></p> <p>. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்</p> <p>ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்</p> <p>தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,</p> <p>செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,</p> <p>உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்</p> <p>எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்</p> <p>வடவனம், வாகை, வான் பூங் குடசம்</p> <p>எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,</p> <p>பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,</p> <p>பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, </p> <p>விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,</p> <p>குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,</p> <p>குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,</p> <p>போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,</p> <p>செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்</p> <p>கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்</p> <p>தில்லை, பாலை, கல்இவர் முல்லை,</p> <p>குல்லை, பிடவம், சிறுமாரோடம்</p> <p>வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்</p> <p>தாழை, தளவம், முள் தாள் தாமரை</p> <p>ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,</p> <p>சேடல், செம்மல், சிறுசெங்குரலி</p> <p>கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை</p> <p><br></p> <p>ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை </p> <p><br></p> <p>பாலை முக்கூட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம்</p> <p>இவை போன்று நெய்தல் முக்கூட்டான மலர்கள் - ஞாழலும்(56), தாழையும்(63), புன்னையும் (93)</p> <p><br></p> <p>புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் - ஐங்குறுநூறு 103</p> <p><br></p> <p>மன்றப் புன்னை மாச் சினை நறு வீ</p> <p>முன்றில் தாழையொடு கமழும்</p> <p>தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே</p> <p>- நற்றிணை 49</p> <p><br></p> <p>தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,</p> <p>புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,</p> <p>வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத</p> <p>செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல்</p> <p>வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப</p> <p>- கலித்தொகை 127</p> <p><br></p> <p>ஞாழல் </p> <p><br></p> <p>&#39;குமரி&#39;, &#39;கன்னி&#39;, &#39;பாவை -என்னும் மூன்று அடை மொழி</p> <p><br></p> <p>தழையோர் கொய்குழை அரும்பிய குமரிஞாழல் - நற்றிணை</p> <p><br></p> <p>ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும்</p> <p>விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும்</p> <p>மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும்</p> <p>பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து</p> <p>- இறையனார் அகப்பொருள் உரை (நக்கீரர்)</p> <p><br></p> <p>கன்னி இளஞாழல் </p> <p>கன்னி நறுஞாழல் - சிலம்பதிகாரம்</p> <p><br></p> <p>மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்</p> <p>பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்</p> <p>கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய</p> <p>கண்ணின் வருந்தும்என் நெஞ்சு</p> <p>- திணைமொழி ஐம்பது 49</p> <p><br></p> <p>அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை</p> <p>மாதர்கொல் மாலுமென் நெஞ்சு</p> <p>- திருக்குறள்</p> <p><br></p> <p>ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்</p> <p>செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்</p> <p>துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்</p> <p>திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்</p> <p>புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. </p> <p>குறுந்தொகை 50</p> <p><br></p> <p>நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ</p> <p>நெய்தல் மா மலர்ப் பெய்த போல</p> <p>ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!</p> <p>தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,</p> <p>&#39;&#39;அன்னாய்!&#39;&#39; என்னும் குழவி போல,</p> <p>இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,</p> <p>நின் வரைப்பினள் என் தோழி;</p> <p>தன் உறு விழுமம் களைஞரோ இலளே.</p> <p>குறுந்தொகை 397</p> <p><br></p> <p>&#39;&#39;நொச்சி மா அரும்பு அன்ன கண்ண</p> <p>எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,</p> <p>இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்</p> <p>உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்</p> <p>மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் </p> <p>- நற்றிணை 267</p> <p><br></p> <p>ஞாழற் பத்து ஐங்குறுநூறு</p> <p><br></p> <p>எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்</p> <p>துவலைத் தண்துளி வீசிப்</p> <p>பயலை செய்தன பனிபடு துறையே.</p> <p><br></p> <p>எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்</p> <p>புள்இறை கூரும் துறைவனை</p> <p>உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே.</p> <p>......</p> <p>எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்</p> <p>புணரி திளைக்கும் துறைவன்</p> <p>புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.</p> <p><br></p> <p>ஞாழற் கோயில்</p> <p><br></p> <p>பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் </p> <p> பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்</p> <p>கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,</p> <p> கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,</p> <p>இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்</p> <p> இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,</p> <p>திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,</p> <p> தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.</p> <p>- அடைவுத் திருத்தாண்டகம்</p> <p><br></p> <p>புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர்,</p> <p> புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர்,</p> <p>வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல்,</p> <p> வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி,</p> <p>நிலமலிநெய்த் தானத்தோடு, எத் தானத்தும்</p> <p> நிலவுபெருங் கோயில்பல கண்டால், தொண்டீர்,</p> <p>கலிவலிமிக் கோனைக் கால் விரலால் செற்ற</p> <p> கயிலாய நாதனையே காண லாமே.</p> <p>- திருநாவுக்கரசர்</p> <p><br></p>

Episode thumbnail for ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்

May 19, 2024

ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்

<p>குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்</p> <p><br></p> <p>தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான &quot;குறிஞ்சிப்பாட்டு&quot; குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். </p> <p><br></p> <p>Flowers in Kurinji Paatu</p> <p><br></p> <p>Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers</p> <p><br></p> <p>References</p> <p>குறிஞ்சிப் பாட்டு</p> <p><br></p> <p>. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்</p> <p>ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்</p> <p>தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,</p> <p>செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,</p> <p>உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்</p> <p>எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்</p> <p>வடவனம், வாகை, வான் பூங் குடசம்</p> <p>எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,</p> <p>பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,</p> <p>பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, </p> <p>விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,</p> <p>குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,</p> <p>குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,</p> <p>போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,</p> <p>செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்</p> <p>கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்</p> <p>தில்லை, பாலை, கல்இவர் முல்லை,</p> <p>குல்லை, பிடவம், சிறுமாரோடம்</p> <p>வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்</p> <p>தாழை, தளவம், முள் தாள் தாமரை</p> <p>ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,</p> <p>சேடல், செம்மல், சிறுசெங்குரலி</p> <p>கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை</p> <p><br></p> <p>மௌவல்</p> <p><br></p> <p>பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்,</p> <p>புன்னகையோ மௌவல் மௌவல்</p> <p><br></p> <p>மனைநடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற்றிணை</p> <p><br></p> <p>மாதரார் முறுவல்போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலித்தொகை 27</p> <p><br></p> <p>மணமௌவல் முகைஅன்ன மாவீழ் வார் நிரைவெண்பல் - கலித்தொகை 14</p> <p><br></p> <p>கொகுடி</p> <p><br></p> <p>நறுந்தண் கொகுடி </p> <p><br></p> <p>திருஞானசம்பந்தர் </p> <p>“புன்னையே கொகுடி முல்லை”, “கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்” </p> <p><br></p> <p>நறும் பாதிரியு நாண்மலர்க் கொகுடியும் - பெருங்கதை</p> <p>குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி - சூளாமணி</p> <p><br></p> <p>கருப்பறியலூர் / மேலைக்காழி / தலைஞாயிறு </p> <p><br></p> <p>சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் </p> <p>குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்</p> <p>மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்</p> <p>கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.</p> <p><br></p> <p>நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் </p> <p>கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்</p> <p>பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று</p> <p>வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.</p> <p><br></p> <p>நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே </p> <p>நிறைந்து தோன்றும்</p> <p>காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்</p> <p>கருப்ப றியலூர்க்</p> <p>கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்</p> <p>கொகுடிக் கோயில்</p> <p>ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்</p> <p>கினிய வாறே.</p> <p><br></p> <p>சேடல்</p> <p>நச்சினார்க்கினியர் - பவழக்கால் மல்லிகை</p> <p>உ. வே. சா- பவழமல்லிகை பாரிசாதம்</p> <p><br></p> <p>சேடல் நெய்தல் பூளை மருதம்</p> <p>சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்</p> <p>- சிலப்பதிகாரம் </p> <p><br></p> <p>சேடல் என்பதற்கு உச்சிச்செலுந்தில் என்னும்மரம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.</p> <p><br></p> <p>செம்மல்</p> <p><br></p> <p>கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின் - திருவிளையாடற்புராணம்.</p> <p><br></p> <p>செங்குரலி</p> <p><br></p> <p>ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,</p> <p>வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்</p> <p>- புறநானூறு 283</p> <p><br></p> <p>கோடல்</p> <p>காந்தள், தோன்றி, கோடல்</p> <p>கோடு - மரக்கொம்பு, வளைவு, மலை முகடு, யானைக் கொம்பு (மருப்பு), சங்கு</p> <p> </p> <p>வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - அகநானூறு 264</p> <p><br></p> <p>வெஞ் சின அரவின் பை அணந்தன்ன</p> <p>தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ</p> <p>அகநானூறு 154</p> <p><br></p> <p>கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - அகநானூறு 23</p> <p><br></p> <p>ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால் - கலித்தொகை 48</p> <p><br></p> <p>களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,</p> <p>ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - கலித்தொகை 101</p> <p><br></p> <p>தண்கமழ்‌ கோடல்‌ துடுப்பு ஈன - திணைமொழி ஐம்பது 21</p> <p><br></p> <p>தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி</p> <p>விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின்</p> <p>புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை,</p> <p>கொல்லுநர் போல, வரும். ஐந்திணை எழுபது 17</p> <p><br></p> <p>கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - பரிபாடல்</p> <p><br></p> <p>பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; </p> <p>கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;</p> <p>கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து</p> <p>ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!</p> <p>- திருநாவுக்கரசர்</p> <p><br></p> <p>கூடலிழைத்தல் :</p> <p><br></p> <p>இது போன்று பத்து பாசுரங்களில் ஆண்டாள் கூடலிழைத்து அரங்கன் தன்னை சேர்வாரா மாட்டாரா என பார்க்கிறார்.</p> <p><br></p> <p>தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார், </p> <p>வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,</p> <p>பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,</p> <p>கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! </p> <p><br></p> <p>காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், </p> <p>வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமணன்,</p> <p>ஒட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னொடும்</p> <p>கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! </p> <p><br></p> <p>ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை</p> <p>நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்</p> <p>கூடலைக் குழற்கோதை முன் கூறிய</p> <p>பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே</p> <p><br></p>

Episode thumbnail for ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)

May 12, 2024

ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)

<p>சேந்தனார் திருப்பல்லாண்டு</p> <p><br></p> <p>மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்</p> <p>நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி</p> <p>செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட</p> <p>கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.</p> <p>-தனிப்பாடல்</p> <p><br></p> <p>செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.</p> <p><br></p> <p>வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை</p> <p><br></p> <p>என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.</p> <p><br></p> <p>&quot;சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக&quot;</p> <p><br></p> <p>திருவிடைக்கழி - சேந்தன்மங்கலம். இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப்பெயருடன் இருக்கின்றது.</p> <p><br></p> <p>இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர்.</p> <p><br></p> <p>திருப்பல்லாண்டு</p> <p><br></p> <p>மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்</p> <p>வஞ்சகர் போயகலப்</p> <p>பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து</p> <p>புவனியெல் லாம்விளங்க</p> <p>அன்ன நடைமட வாள்உமை கோன்அடி</p> <p>யோமுக் கருள்புரிந்து</p> <p>பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்</p> <p>பல்லாண்டு கூறுதுமே. (1)</p> <p><br></p> <p>மிண்டு மனத்தவர் போமின்கள்</p> <p>மெய்யடியார்கள் விரைந்து வம்மின்</p> <p>கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்</p> <p>செய்மின் குழாம்புகுந்</p> <p>தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்</p> <p>ஆனந்த வெள்ளப்பொருள்</p> <p>பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (2)</p> <p><br></p> <p>நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட</p> <p>நிகரிலா வண்ணங்களும்</p> <p>சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்</p> <p>திறங்களு மேசிந்தித்</p> <p>தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்</p> <p>அமிர்தினுக் காலநிழற்</p> <p>பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (3)</p> <p><br></p> <p>சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த</p> <p>தூய்மனத் தொண்டருள்ளீர்</p> <p>சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்</p> <p>சிறுநெறி சேராமே</p> <p>வில்லாண்டகன கத்திரள் மேரு</p> <p>விடங்கன் விடைப்பாகன்</p> <p>பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (4)</p> <p><br></p> <p>புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்</p> <p>டின்னம் புகலரிதாய்</p> <p>இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்</p> <p>கென்செய வல்லம்என்றும்</p> <p>கரந்துங் கரவாத கற்பக னாகிக்</p> <p>கரையில் கருணைக்கடல்</p> <p>பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (5)</p> <p><br></p> <p>சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்</p> <p>எங்குந் திசைதிசையன</p> <p>கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா</p> <p>மாய்நின்று கூத்தாடும்</p> <p>ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை</p> <p>அப்பனை ஒப்பமரர்</p> <p>பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (6)</p> <p><br></p> <p>சீரும் திருவும் பொலியச் சிவலோக</p> <p>நாயகன் சேவடிக்கீழ்</p> <p>ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற</p> <p>தார்பெறு வார்உலகில்</p> <p>ஊரும் உலகும் கழற உழறி</p> <p>உமைமண வாளனுக்காட்</p> <p>பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்</p> <p>பல்லாண்டு கூறுதுமே (7)</p> <p><br></p> <p>சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்</p> <p>கொங்கையிற் செங்குங்குமம்</p> <p>போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று</p> <p>புண்ணியர் போற்றிசைப்ப</p> <p>மாலும் அயனும் அறியா நெறிதந்து</p> <p>வந்தென் மனத்தகத்தே</p> <p>பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (8)</p> <p><br></p> <p>பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்</p> <p>பாற்கடல் ஈந்தபிரான்</p> <p>மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்</p> <p>மன்னிய தில்லைதன்னுள்</p> <p>ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்</p> <p>பலமே இடமாகப்</p> <p>பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (9)</p> <p><br></p> <p>தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்</p> <p>வண்டத் தொடுமுடனே</p> <p>பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்</p> <p>போனக மும் அருளிச்</p> <p>சோதி மணிமுடித் தாமமும் நாமமும்</p> <p>தொண்டர்க்கு நாயகமும்</p> <p>பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (10)</p> <p><br></p> <p>குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி</p> <p>எங்கும் குழாம்பெருகி</p> <p>விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி</p> <p>மிகுதிரு வாரூரின்</p> <p>மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்</p> <p>மணஞ்செய் குடிப்பிறந்த</p> <p>பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே</p> <p>பல்லாண்டு கூறுதுமே (11)</p> <p><br></p> <p>ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்</p> <p>அணியுடை ஆதிரைநாள்</p> <p>நாரா யணனொடு நான்முகன் அங்கி</p> <p>இரவியும் இந்திரனும்</p> <p>தேரார் வீதியில் தேவர் குழாங்கள்</p> <p>திசையனைத்தும் நிறைந்து</p> <p>பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்</p> <p>பல்லாண்டு கூறுதுமே (12)</p> <p><br></p> <p>எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு</p> <p>தாம்மெம் பிரான்என் றென்று</p> <p>சிந்தை செய்யும் சிவன் சீரடியார்</p> <p>அடிநாய் செப்புரை</p> <p>அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்</p> <p>தாண்டுகொண் டாருயிர்மேற்</p> <p>பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று</p> <p>பல்லாண்டு கூறுதுமே (13)</p>

140 total episodes available

Deep-dive analytics for ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

Frequently asked questions

Have a different question and can't find the answer you're looking for? Reach out to our support team by sending us an email and we'll get back to you as soon as we can.

What is ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து.

ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.

How often does this podcast release new episodes?

This podcast updates weekly.

Where can I listen to this podcast?

This podcast is available on 8 platforms including Apple Podcasts, Spotify, and more. You can also use the RSS feed directly.

Does this podcast accept guests?

Yes, this podcast regularly features guests.

Legal Disclaimer

Pod Engine is not affiliated with, endorsed by, or officially connected with any of the podcasts displayed on this platform. We operate independently as a podcast discovery and analytics service.

All podcast artwork, thumbnails, and content displayed on this page are the property of their respective owners and are protected by applicable copyright laws. This includes, but is not limited to, podcast cover art, episode artwork, show descriptions, episode titles, transcripts, audio snippets, and any other content originating from the podcast creators or their licensors.

We display this content under fair use principles and/or implied license for the purpose of podcast discovery, information, and commentary. We make no claim of ownership over any podcast content, artwork, or related materials shown on this platform. All trademarks, service marks, and trade names are the property of their respective owners.

While we strive to ensure all content usage is properly authorized, if you are a rights holder and believe your content is being used inappropriately or without proper authorization, please contact us immediately at hey@podengine.ai for prompt review and appropriate action, which may include content removal or proper attribution.

By accessing and using this platform, you acknowledge and agree to respect all applicable copyright laws and intellectual property rights of content owners. Any unauthorized reproduction, distribution, or commercial use of the content displayed on this platform is strictly prohibited.