May 26, 2024
ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal)
<p>குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல்</p>
<p><br></p>
<p>தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். </p>
<p><br></p>
<p>Flowers in Kurinji Paatu</p>
<p><br></p>
<p>Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers</p>
<p><br></p>
<p>References</p>
<p>குறிஞ்சிப் பாட்டு</p>
<p><br></p>
<p>. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்</p>
<p>ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்</p>
<p>தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,</p>
<p>செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,</p>
<p>உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்</p>
<p>எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்</p>
<p>வடவனம், வாகை, வான் பூங் குடசம்</p>
<p>எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,</p>
<p>பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,</p>
<p>பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, </p>
<p>விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,</p>
<p>குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,</p>
<p>குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,</p>
<p>போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,</p>
<p>செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்</p>
<p>கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்</p>
<p>தில்லை, பாலை, கல்இவர் முல்லை,</p>
<p>குல்லை, பிடவம், சிறுமாரோடம்</p>
<p>வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்</p>
<p>தாழை, தளவம், முள் தாள் தாமரை</p>
<p>ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,</p>
<p>சேடல், செம்மல், சிறுசெங்குரலி</p>
<p>கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை</p>
<p><br></p>
<p>ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை </p>
<p><br></p>
<p>பாலை முக்கூட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம்</p>
<p>இவை போன்று நெய்தல் முக்கூட்டான மலர்கள் - ஞாழலும்(56), தாழையும்(63), புன்னையும் (93)</p>
<p><br></p>
<p>புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் - ஐங்குறுநூறு 103</p>
<p><br></p>
<p>மன்றப் புன்னை மாச் சினை நறு வீ</p>
<p>முன்றில் தாழையொடு கமழும்</p>
<p>தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே</p>
<p>- நற்றிணை 49</p>
<p><br></p>
<p>தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,</p>
<p>புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,</p>
<p>வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத</p>
<p>செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல்</p>
<p>வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப</p>
<p>- கலித்தொகை 127</p>
<p><br></p>
<p>ஞாழல் </p>
<p><br></p>
<p>'குமரி', 'கன்னி', 'பாவை -என்னும் மூன்று அடை மொழி</p>
<p><br></p>
<p>தழையோர் கொய்குழை அரும்பிய குமரிஞாழல் - நற்றிணை</p>
<p><br></p>
<p>ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும்</p>
<p>விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும்</p>
<p>மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும்</p>
<p>பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து</p>
<p>- இறையனார் அகப்பொருள் உரை (நக்கீரர்)</p>
<p><br></p>
<p>கன்னி இளஞாழல் </p>
<p>கன்னி நறுஞாழல் - சிலம்பதிகாரம்</p>
<p><br></p>
<p>மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்</p>
<p>பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்</p>
<p>கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய</p>
<p>கண்ணின் வருந்தும்என் நெஞ்சு</p>
<p>- திணைமொழி ஐம்பது 49</p>
<p><br></p>
<p>அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை</p>
<p>மாதர்கொல் மாலுமென் நெஞ்சு</p>
<p>- திருக்குறள்</p>
<p><br></p>
<p>ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்</p>
<p>செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்</p>
<p>துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்</p>
<p>திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்</p>
<p>புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. </p>
<p>குறுந்தொகை 50</p>
<p><br></p>
<p>நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ</p>
<p>நெய்தல் மா மலர்ப் பெய்த போல</p>
<p>ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!</p>
<p>தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,</p>
<p>''அன்னாய்!'' என்னும் குழவி போல,</p>
<p>இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,</p>
<p>நின் வரைப்பினள் என் தோழி;</p>
<p>தன் உறு விழுமம் களைஞரோ இலளே.</p>
<p>குறுந்தொகை 397</p>
<p><br></p>
<p>''நொச்சி மா அரும்பு அன்ன கண்ண</p>
<p>எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,</p>
<p>இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்</p>
<p>உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்</p>
<p>மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் </p>
<p>- நற்றிணை 267</p>
<p><br></p>
<p>ஞாழற் பத்து ஐங்குறுநூறு</p>
<p><br></p>
<p>எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்</p>
<p>துவலைத் தண்துளி வீசிப்</p>
<p>பயலை செய்தன பனிபடு துறையே.</p>
<p><br></p>
<p>எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்</p>
<p>புள்இறை கூரும் துறைவனை</p>
<p>உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே.</p>
<p>......</p>
<p>எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்</p>
<p>புணரி திளைக்கும் துறைவன்</p>
<p>புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.</p>
<p><br></p>
<p>ஞாழற் கோயில்</p>
<p><br></p>
<p>பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் </p>
<p> பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்</p>
<p>கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,</p>
<p> கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,</p>
<p>இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்</p>
<p> இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,</p>
<p>திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,</p>
<p> தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.</p>
<p>- அடைவுத் திருத்தாண்டகம்</p>
<p><br></p>
<p>புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர்,</p>
<p> புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர்,</p>
<p>வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல்,</p>
<p> வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி,</p>
<p>நிலமலிநெய்த் தானத்தோடு, எத் தானத்தும்</p>
<p> நிலவுபெருங் கோயில்பல கண்டால், தொண்டீர்,</p>
<p>கலிவலிமிக் கோனைக் கால் விரலால் செற்ற</p>
<p> கயிலாய நாதனையே காண லாமே.</p>
<p>- திருநாவுக்கரசர்</p>
<p><br></p>